அகத்தியர் ஞானம்
அட்டசித்தாமெட்டெட்டுஞ் சித்தியாகுஞ்
மடிமுடியாமிரண்டுக்கும் வழிதானீது
விட்டெழுத்துதொட்டெழுத்தும்விடாதெழுத்தும்
வேதாந்தசற்குரவை வணங்கிக்கேளு
சட்டமிட்டவாதார மிம்மட்டமாச்சு
சண்முகமாமாதாரக் கருவைக்கேளு
திட்டமுடன் மனவுறுதி சின்மயத்தை வெல்லுந்
திருச்சிற்றம்பலம்போற்ற ஞானமுற்றே
பொருள்
கருமசித்திகள் அஷ்டமா சித்திகளும் , யோக சித்தியாம் 64 சித்திகளும் கைவரப் பெறும்
திருவடி காண , சுழிமுனை உச்சி கண்ணால் காண , அடியும் முடியும் ஆன இறைவனை காணும் வழி இது
ஞானம் என்பது என்ன வேதாந்த நிலையில் இருக்கும் குருவை வணங்கி கேட்டுக்கொள்வாயாக
வேதாந்தம் = உச்சி அனுபவம்
வேதாந்த குரு – ஆன்மா
அந்த சண்முகமணி தான் குருமணி ஆகுமே
மன அமைதியுடன் மனவுறுதியுடன் இருந்தால் ஞானம் அடையலாம் – மாயை வெல்லலாம்
சிவம் போற்ற , இந்த ஞான நூல் முற்றுப்பெற்றது
வெங்கடேஷ்