அன்பர் சந்தேகம்
உண்மை சம்பவம் ஜனவரி 2022
உரையாடல் – அலைபேசி
1 அன்பர் :
இப்போது சித்தர்கள் என்ன செய்து கொண்டிருப்பர் ??
நான் :
உண்மையாக கடவுளை தேடுவோரை அவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள்
அவர்க்கு எல்லா விதத்திலும் உதவுவர்
போலிகள் – சாமியார்/ மத போதகர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என பார்த்து சிரித்தபடி இருப்பர்
எப்படி எல்லாம் ஊரை அப்பாவி மக்களை ஏமாத்தி பொருள் ஈட்டுகிறார்
எப்படி பெண்கள் கற்பை சூரையாடுகிறார்
எப்படி தவறாக யோகம் ஞானம் பொருள் விளக்கம் அளித்து , பயிற்சி அளிக்கிறார் என பார்த்தபடி இருப்பர்
இதில் பலர் மோசம் போவது பார்த்து – அவரவர் கர்மம்
என எண்ணியபடி இருப்பர்
அற்பமான செயல்கள் -மத மாற்றம் – போலி பிரசங்கம்
இதர காரியம் பார்த்து எள்ளி நகையாடியபடி இருப்பர்
அவர் : ஏன் ??
நான் :
இதுக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமே இலை எனும் போது , அவர் வேறென்ன செய்வார்??
இதனால் எல்லாம் ஞானம் அடைய முடியுமா ??
உலகத்தில் பொருள் – சுக போக – உல்லாச வாழ்வு வேணுமானாலும் கிட்டலாம் ஆனால் தெயவத்தின் அருள் ??
கடவுளுக்கு இதில் துளி கூட விருப்பம் இன்று
வெங்கடேஷ்