“ விழிப்புணர்வு – ஏன் அவசியம் ?? பெருமை “
ஞானம் அடைய தூக்கம் ஒழித்திருத்தல் அவசியம்
அப்போது தான் வாசி தொடர்ச்சியாக மேலேறும்
இலை எனில் கீழ் இறங்கிவிடும்
அதுக்கு “உள் விழிப்புணர்வு “ மிக மிக அவசியமாகிறது
வாசி தொடர்ச்சியாக 24*7 கவனித்த படி இருக்க விழிப்புணர்வு தேவை
இதைத் தான் “ தூங்காத தூக்கம் “ என்கிறார் சித்தர் பெருமக்கள்
பார்ப்பான் ஆகிய ஆன்மாவை விழிப்புற செய்து
சதா உள் கவனித்தல் நிலையில் இருக்க வைப்பதே விழிப்புணர்வு
யார் இடை நிலையில் வகிக்கின்றாரோ ??
உணவு உறக்கம் பணி காமம் எல்லாவற்றிலும் மிதம் இடை நிலை
அவர்க்கே விழிப்புணர்வு – தூங்காத தூக்கம் சாத்தியம் ஆகும்
வெங்கடேஷ்