ஆணிப்பொன்னம்பலக் காட்சி
- 1 . ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சிய டி – அம்மா
அற்புதக் காட்சிய டி.
கண்ணிகள்
- 2. ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
வீதிஉண் டாச்சுத டி – அம்மா
வீதிஉண் டாச்சுத டி. ஆணி - 3. வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு
மேடை இருந்தத டி – அம்மா
மேடை இருந்தத டி. ஆணி - 4. மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
கூடம் இருந்தத டி – அம்மா
கூடம் இருந்தத டி. ஆணி - 5. கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
மாடம் இருந்தத டி – அம்மா
மாடம் இருந்தத டி. ஆணி - 6. ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
என்னென்று சொல்வன டி – அம்மா
என்னென்று சொல்வன டி. ஆணி - 7. ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
சீர்நீலம் ஆச்சுத டி – அம்மா
சீர்நீலம் ஆச்சுத டி. ஆணி - 8. பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
பவளம தாச்சுத டி – அம்மா
பவளம தாச்சுத டி. ஆணி - 9. மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
மாணிக்கம் ஆச்சுத டி – அம்மா
மாணிக்கம் ஆச்சுத டி. ஆணி - 10. பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
பேர்மணி ஆச்சுத டி – அம்மா
பேர்மணி ஆச்சுத டி. ஆணி - 11. வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
வெண்மணி ஆச்சுத டி – அம்மா
வெண்மணி ஆச்சுத டி. ஆணி - 12. புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
பொன்மணி ஆச்சுத டி – அம்மா
பொன்மணி ஆச்சுத டி. ஆணி - 13. பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
படிகம தாச்சுத டி – அம்மா
படிகம தாச்சுத டி. ஆணி
பொருள் :
புருவ மையத்தில் வரும் அனுபவம் உரைக்கிறார் வள்ளல் பெருமான்
வீதி – சுழுமுனை நாடி
மேடை – வாசி வீசும் மேடை – புருவ மத்தி
ஏறுவதுக்கு கடினமாகையால் மேடை என்றார்
“ மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே “
7 நிலை மாடம்
கீழ் வெளி – தத்துவ வெளிகள் 3
ஆன்மா – துவாத சாந்த பெருவெளி
மேல் வெளி – பர – பரம்பர – பராபர வெளிகள்
இதில் காணும் படிகள்
பஞ்ச இந்திரிய ஒளிகள் நிறங்கள் அத் மணிகளாக கற்பிக்கப்பட்டுள்ளது
- 14. ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
இசைந்தபொற் றம்பம டி – அம்மா
இசைந்தபொற் றம்பம டி. ஆணி - 15. பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட
புதுமைஎன் சொல்வன டி – அம்மா
புதுமைஎன் சொல்வன டி. ஆணி - 16. ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
என்னள வல்லவ டி – அம்மா
என்னள வல்லவ டி. ஆணி - 17. ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
ஆகவந் தார்கள டி – அம்மா
ஆகவந் தார்கள டி. ஆணி - 18. வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
வல்லபம் பெற்றன டி – அம்மா
வல்லபம் பெற்றன டி. ஆணி - 19. வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
மணிமுடி கண்டேன டி – அம்மா
மணிமுடி கண்டேன டி. ஆணி
பொருள் :
பார்வை மேலேறுதல் தான் வள்ளல் பெருமான் தான் ஏறுவதை
குறிப்பிடுகிறார்
பொற்தம்பம் – பொன் ஒளி வீசும் சுழுமுனை நாடி
அனல் வீசும் சுழுமுனை நாடி
- 20. மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
மற்றது கண்டேன டி – அம்மா
மற்றது கண்டேன டி. ஆணி - 21. கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
கோயில் இருந்தத டி – அம்மா
கோயில் இருந்தத டி. ஆணி
பொருள் :
மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
கோயில் = ஆன்மா இருக்கும் இடம்
அதை தாங்குவது மணிமுடி எங்கிறார்
22. கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில்
கூசாது சென்றன டி – அம்மா
கூசாது சென்றன டி. ஆணி
- 23. கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள்
கோடிபல் கோடிய டி – அம்மா
கோடிபல் கோடிய டி. ஆணி - 24. ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
ஐவண்ணம் ஆகும டி – அம்மா
ஐவண்ணம் ஆகும டி. ஆணி - 25. அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்
அப்பாலே சென்றன டி – அம்மா
அப்பாலே சென்றன டி. ஆணி
பொருள் :
ஆன்ம அனுபவம் பெற்று – நெற்றிக்கண் திறந்து மேலும் மேல் சென்றனன்
அவர் வள்ளல் பெருமான் யார் ?? இவ்வளவு தூரம் மேலேறி வந்துளாரே என வினவினதாக தெரிவிக்கிறார்
- 26. அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில்
ஐவர் இருந்தார டி – அம்மா
ஐவர் இருந்தார டி. ஆணி - 27. மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
மணிவாயில் உற்றேன டி – அம்மா
மணிவாயில் உற்றேன டி. ஆணி - 28. எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக
இருவர் இருந்தார டி – அம்மா
இருவர் இருந்தார டி. ஆணி - 29. அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
அன்பொடு கண்டேன டி – அம்மா
அன்பொடு கண்டேன டி. ஆணி - 30. அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
அம்மை இருந்தாள டி – அம்மா
அம்மை இருந்தாள டி. ஆணி - 31. அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேன டி – அம்மா
அமுதமும் உண்டேன டி. ஆணி - 32. தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
சந்நிதி கண்டேன டி – அம்மா
சந்நிதி கண்டேன டி. ஆணி - 33. சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
சாமி அறிவார டி – அம்மா
சாமி அறிவார டி. - 34. ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சிய டி – அம்மா
அற்புதக் காட்சிய டி.
பொருள் :
ஆன்ம அனுபவம் தாண்டி மேல் சென்று திருச்சிற்றம்பல வாயில் கண்டேன்
அங்கு சிவகாம வல்லி அம்மை கண்டனன்
அவள் அருளால் ஆனந்த நடராஜர் நடமிடும் சபை கண்டனன்
சிற்றம்பலத்துள் நான் நுழைந்தேன்
அந்த அனுபவம் உரைக்க எனக்கு வாயிலை உணர்விலை – எதுவுமிலை
அது சுகாதீத பெருவெளி – பெரு ஞ்சுக வெளி அனுபவமாயிற்று
வெங்கடேஷ்
படம் குழப்பத்தை கொடுக்கும்
இந்த பதிவு கொஞ்சம் கொழப்பமாக இருக்கும்
ஏனெனில் ??
இந்த ஞான சபை அமைப்பானது , புறத்தே ஆன்ம அனுபவமும் அபெ ஜோதி அனுபவமும் ரெண்டும் கலந்தே காட்டப்பட்டுள்ளது
நான் விளக்கிக்கூறினால் நன்கு விளங்கும்
7 திரைகள் நீக்கம் ஆன்ம அனுபவம் தான் அளிக்கும்
அதுக்கு மேல் தான் சுத்த சிவம் – அபெஜோதி அனுபவம்
இதை கலவை ஆக்கிவிட்டார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்