“ மகாமகமும் கும்பமேளாவும் “
இரு பிரசித்தி பெற்ற நிகழ்வு வைபவமும் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுது
முதலாவது த நாட்டு கும்பகோணத்தில்
பின்னது வட நாட்டில் காசி ஹரித்துவார் நாசிக் என நதி சார்ந்த இடத்தில்
மகாமகத்தின் போது – 9 புண்ணிய நதிகள் அந்த குளத்தில் சேர்வதாக நம் புராணம் உரைக்குது
அதன் உண்மை பொருள் :
பிரணவத்தின் 9 சூக்கும ஒளிகள் தான் நதிகளாக உருவகம் செயப்பட்டு , அது நம் சிரசில் சேர்க்கும் அனுபவம் தான் மகாமகமாக புறத்திலே காட்டப்படுது
இது அனுபவத்துக்கு கொண்டு வர – குறைந்த பட்சம் 12 ஆண்டு பிடிக்கும் என்பதால் – இந்த நிகழ்வு 12 ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படுது
எல்லா காரணமாக வைக்கப்பட்டுளது
எல்லாம் அக யோக ஞான அனுபவத்தின் புற வெளிப்பாடு தான்
புறத்தை பிடித்து அகத்தை கோட்டை விடக்கூடாது
வெங்கடேஷ்