“ சைவம் – சன்மார்க்க விளக்கம் “ 2
அகப்பேய் சித்தர் பாடல் :
சைவ மானதடி அகப்பேய்
தானாய் நின்றதடி
சைவ மில்லையாகில் அகப்பேய்
சலம்வருங் கண்டாயே
சைவம் ஆருக்கடி அகப்பேய்
தன்னை யறிந்தவர்க்கே
சைவ மானவிடம் அகப்பேய்
சற்குரு பாதமடி
விளக்கம் :
சைவம் ஆர் யார்க்கானது எனில் ??
யார் தன் சுயத்தில் நிற்கிறாரோ ?? தன் ஆன்ம அனுபவத்தில் நிற்கிறாரோ ?? அவர் தான் சைவர்
அப்படி இல்லாதவர் அசைந்த படி இருப்பர்
ஆன்மா அசையாதது
ஆதாரம் : அருட்பா பாடல்
“ மிகு பெருங்காற்று அடித்தாலும்
ஆடாது அசையாது “ என தொடங்கும் பாடல் வரிகளால் இந்த கருத்து நிரூபிக்கப்படுது
ஆன்மா குரு ஆகையால் , சைவம் விளங்குமிடம் குரு பாதம் என பாடுகிறார் சித்தர்
வெங்கடேஷ்