திருப்பரங்குன்றம் / பரங்கிரி – ஞான சம்பந்தர் தேவாரம்
( மதுரை )
சுவாமி : பரங்கிரிநாதர்; அம்பாள் : ஆவுடைநாயகி
கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத்
தொடைநவில்கின்ற வில்லினன்அந்திச் சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்
படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே. 6
விளக்கம் :
சிரசு உச்சியில் பெரிய மாடத்தில் , மும்மலக் கோட்டையை நுதல் கண் கனலால் எரித்த நிகழ்வு கூறும் தேவாரப்பாடல்
திரிபுர தகனம் நடப்பது அவ்விடத்தே என்பதால் இந்த சம்பவத்தை பாடுகிறார்
மூலாக்கினியால் எரிந்த மும்மலம்
இது உச்சி பெருமை கூற வந்ததாகும்
வெங்கடேஷ்