“ திருமந்திரம் – சுழுமுனை பெருமை “
படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஒட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே 2009
விளக்கம் :
பரந்து விரிந்த ஆல மரம் வித்து போல , ஒளிமயமான ஆன்மா சிற்றம்பல கதி அடைய , அதுக்கு உச்சி விளங்கும் மலமாகிய இருள் அகல நல் வழி நாடுதல் சிறந்தது
அந்த வழி – திருவடி பற்றி தவம் இயற்றல் ஆம் , சிவத்தின் அருள் பெறல் ஆம்
வெங்கடேஷ்