“ திருமந்திரம் – சித்தம் பெருமை “
மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே.
விளக்கம் :
கலங்கிய நீர் ஒக்கும் மனிதர் தம் மனம்
தெளிவில்லாததால் இறைவன் யார் , அவன் தன்மை அறிகிலார்
குளத்து நீர் தனியே எடுத்து வைத்து , தெளிய வைத்து ,பின்னர் குடிக்க பயன்படுத்தல் போல் , சாதகர் சிந்தை யாவும் தவத்தால் சிவமே நிரம்பி , தெளிந்து நின்றால், ஆன்மா சிவமாகும்
வெங்கடேஷ்