“ பாரதியாருக்குக் கிடைத்த உபதேசம் “
வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி
மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்
தேசுடைய பரிதி உரு கிணற்றினுள்ளே
தெரிவது போல உனக்குள்ளே சிவத்தைக் காண்பாய்
பேசுலதால் பயனில்லை அனுபவத்தால்
பேரின்பம் காண்பதுவே ஞானம் என்றான்.
விளக்கம் :
வாசியை உச்சியில் வைத்து கட்டி ஓவியம் போல் அசையாமல் நிற்கப் பழக வேணும்
அப்போது , அந்த அனுபவத்தால் , நீரில் நிழல் தெரிவது போல , ஆன்ம சூரியன் தரிசனம் கிட்டும்
வாய்ப்பேச்சு கூடாது , தவத்தால் அனுபவத்துக்கு வரவேணும்
அது ஞானம்
வெங்கடேஷ்