“ திருமந்திரம் – உச்சி பெருமை “
ஓடிச்சென்றாங்கே ஒரு பொருள் கண்டவர்
நாடியுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச் சென்றாங்கே தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே
விளக்கம் :
பிரம்மமாகிய ஆன்மாவைக் காண தவம் செய்து நாதம் எழுப்பி அதன் மூலம் வாசி மேலேற்றி – உச்சி அடைந்து அங்கு அமுதம் உண்டு , அதில் விளங்கும் இருள் ஆகிய பகைவர் மும்மலம் ஒழிப்பர்
யார்??
ஞானியர்
பாடி = உச்சி
அதே ஆயர்பாடியில் தான் கண்ணன் தூங்குகிறான்
அப்படி எனில் கண்ணன் இருப்பிடம் சு உச்சி தான்
கண்ணனும் ஆன்மாவும் ஒன்றே
அப்போது சமய மதம் எப்படி பொய் ஆகும் ??
சென்னைபாடி இந்த அர்த்தம் தான் பொருள்படுது
வெங்கடேஷ்