காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000
கால்(வாசி) ஊன்று – மூலமார்க்கம் – தானாய்க் காண்
உச்சியே நடுவாசல் பத்தாம் வாசல்
ஊடுருவ மூலதண்டு நாக்கின் மார்க்கம்
பச்சியே *வாசிபரி தேசிகாசி
பரைமூச்சு ஆடிடுமே பரத்தின் சூது
நச்சியே “காலூன்று மூலமார்க்கம்”
நடுநாடி உயிர்நாடி பிராணநாடி
மெச்சியே தான் நடனந் திருக்கூத்தாடும்
விளம்பென்றா லாருரைப்பார் *தானாய்க்காணே
விளக்கம் :
மூலத்தில் வாசி உருவாக்கு
சுழிமுனை உச்சி தான் 10 வாசல் நடு வாசலுமாம்
வாசியின் இன்னொரு பேர் பரை மூச்சு என கூறுகிறார் சித்தர்
வாசியை உச்சியில் நிலை நாட்டினால், பிராண நாடியாம் சு நாடியில் ஆன்மா திரு நடம் காணலாம்
யாரும் வெளியே கூற மாட்டார் – ஆகையால் நீயே தவம் செய்து காண்பாயாக
வெங்கடேஷ்