திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் இரவும் பகலு மிறந்த விடத்தேகுரவன் செய்கின்ற குழலியை யுன்னயரவஞ் செய்யாம லவளுடன் சேரப்பரிவொன்றி லாளும் பராபரை தானே 1528: விளக்கம்: இரவும் பகலுமற்ற துவாத சாந்தப் பெருவெளி விளங்கும் சத்தியை நினைத்து , தவம் செய்து , டம்பம் பெருமை ஆர்ப்பாட்டம் இல்லாமல் நிற்க, பரத்தில் விளங்கும் சத்தியானவள் ஆன்ம சாதகனை அன்போடு ஆட்கொள்வாள் அதாவது அசையாது தவத்தில் நின்றக்கால் சத்தியானவள் நம்மை ஆட்கொள்வாள் வெங்கடேஷ்