திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
“ இறை பெருமை “
ஆயத்துள் நின்ற அறுசமை யங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்துட் பட்டுப் பதைக்கின்ற வாறே பாடல் 1530:.
விளக்கம் :
உலகத்தில் மக்களை நெறிபடுத்த ஏற்படுத்தப்பட்ட சமயங்கள் எல்லாம் – நம் தேகத்தில் விளங்கி நின்ற இறையை அறியவிலை
மக்கள் மும்மலத்தில் அழுந்தி நின்று மரணத்தில் முடிகின்றார்
தெய்வம் சமய மதங்களுக்கு அப்பாற்பட்டவன்
சடங்கு சம்பிரதாயம் சாங்கியம் – இதனால் அடையமுடியாதவன்
வெங்கடேஷ்
