“ பார்வை பெருமை “
1 ஒரு அழகான பெண்
ஒரு ஆடவனை கண்ணால் பார்த்தால் போதும்
அவள் காதல் வலையில் இவன்
கண்கள் உரசிக் கொண்டால்
காதல் தீ பத்திக்கொளும்
2 ஒரு பொறுக்கி
ஒரு அழகான பெண்ணை பார்த்துவிட்டால் போதும்
அவள் பலாத்காரம் செயப்படுவாள்
3 ஒரு அரசியல்வாதி – நில புரோக்கர்
நல்ல நிலம் – சொத்து கண்ணுக்கு புலப்பட்டால் போதும்
உடன் அது அவர் பேருக்கு மாறிடணும்
சொந்தக்காரர்க்கு விருப்பமிருக்கோ இலையோ ??
நல்ல விலையோ – அடி மாட்டு விலையோ ??
4 ஒரு சினிமா டைரக்டர்
ஒரு அழகான பெண்ணை பார்த்துவிட்டால்
உடன் அவள் நடிகை ஆகிவிடுவாள்
5 கோபத்துடன் கண்ணால் பார்த்தால் போதும்
எல்லாரும் அடங்குவர்
ஏன் ஒரு நகரமே பத்தி எரியும்
6 ஆனால்
குரு – இறையின் கடைக்கண் பார்வை பெற்றுவிட்டால்
அவனுக்கு சகல சௌபாக்கியமும் ஞானமும் கிட்டும்
வெங்கடேஷ்