“ சித்தர் பெருமை “ – ஶ்ரீகாரைச்சித்தர்
வர்க்கமெலாம் பணிவர்க்கம் சித்தர் வர்க்கம்
வானவரும் தாளில்விழ வளரும் வர்க்கம்
சர்க்கரையும் தேன்பால்முக் கனியும் காணாத்
தனிச்சுவையாம் மதியமிர்தம் தழைக்கும் வர்க்கம்
அர்க்யமுற வாதவனை யகத்திற் கண்டே
அந்தணனாய் வேதாந்தத் தணைந்த வர்க்கம்
விளக்கம் :
உலகிலுள்ள எல்லாரும் பணிந்து தொழுதேத்தும் வர்க்கம் சித்தர்கள் வர்க்கம்
வர்க்கம் – கூட்டம்
வானிலுள்ள் தேவரும் பணிந்து ஏத்துபவர்கள் தான் சித்தர் பெருமக்கள்
சர்க்க்ரை தேன் பால்
முக்கனி – மா பலா வாழை எல்லாம் கலந்து கொடுத்தாலும் அதுக்கு ஈடாகா வானமுதம் பருகும் வர்க்கம் சித்தர் வர்க்கம்
தவத்தால் தணல் வளர்க்கும் கூட்டமாம் அந்தணராக ஆன்ம சூரியனை தன் அகத்தில் கண்டே , எல்லா அந்தமும் கடந்த கூட்டம் சித்தர் வர்க்கம் என சித்தர் பெருமை பாடுகிறார்
யார் அந்தணர் எனில் ??
யார் தவத்தால் தணல் கனல் தீ வளர்க்கிறாரோ அவரே
இது பிறப்பால் வருவதல்ல
வெங்கடேஷ்