“ சிவவாக்கியர் – ஆன்ம அனுபவம் “
கரு இருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குரு இருந்து சொன்ன வார்த்தை குறித்துநோக்க வல்லிரேல்
உரு இலங்கு மேனியாகி உம்பராகி நின்றநீர்
திரு இலங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே
விளக்கம் :
சிற்றின்ப யோனிக்கே ஆசை வைத்திருக்கும் உலக மக்களே – குரு சொன்ன கருத்துபடி – தவம் பயிற்சி செய்வீர்களானால் , அதன் பயனால் அனுபவத்தால், உங்கள் ஸ்தூல பரு உடல் மாற்றமாகி ஆன்ம /ஒளி தேகம் சித்தியாகுமே
ஆன்மாவுடன் கலக்கலாகும்
திரு – ஆன்மா குறிப்பது
வெங்கடேஷ்