திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – சாமானியர் தம் உண்மை நிலை
கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவனெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்
குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. 1538
விளக்கம் :
கலதிகள் – ராக துவேஷத்தில் தோய்ந்து இருப்பவர் – கீழ் நிலை மக்கள் – அறிவில்
இவர்கள் கழுதைகள் போல் கத்துவர்
சுத்த சிவம் எங்கும் எதிலும் கலந்து நிற்கின்றனன் என அறியாது – பைத்தியம் பிடித்து , அலைந்து திரிந்தும் , பிறப்பிறப்பில் வருவாரே
வெங்கடேஷ்