சுடுகாடு வெட்டியான் பாடல்
வேதம் பிறந்ததெல்லாம் மாற்றி பிறக்கவல்லோ
மாற்றிப்பிறக்க வைக்கும் சூட்சம் மறைக்கவல்லோ
சொல்லா யோனியை மெல்ல திறக்கவல்லோ
கல்லா குழந்தைக்கு கரத்தினை நீட்டவல்லோ
விளக்கம் :
வேதம் எதுக்கு எழுதப்பட்டிருக்கு ??
மாற்றிப்பிறப்பதுக்குத் தான்
அப்படி எனில் ??
ஜீவன் பரிணாம வளர்ச்சி கண்டு – மறு கட்டம் அடையத் தான்
அது தான் – ஆன்மாவாக வாதம் ஆகத் தான் என கூறியவாறு
சொல்லா யோனி எனப்படும் பேரின்ப யோனி ஆகிய மௌன பீடம் திறக்கத் தான்
வெங்கடேஷ்