“ திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் “
இமையவர் தம்மையு மெம்மையு முன்னம்
அமைய வகுத்தவ னாதி புராணன்
சமையங்க ளாறுந்தன் றாளிணை நாட
வமையங் கழல்நின்ற வாதிப் பிரானே 1557
விளக்கம்:
தேவர்களையும் மனிதர் தமையும் சுத்த சிவம் , ஆதியிலே அவரவர் – உயிர் நிலைக்கேற்ப – தனு கரண புவன போகம் அமைத்து வாழச் செய்து வருகின்றான்
இதில் எல்லாம் அடக்கம் – வினை – பக்குவம் – அருள்
அவைகள் உய்ய ஆறு சமயம் மூலம் ஒழுக்க நெறிகளை வகுத்து அதன் மூலம் தன் திருவடி சேர , கொடுத்துளான்
அவன் எல்லவர்க்கும் முன்னம் பழம் பொருள் ஆனவன் தலைவனும் ஆவான்
வெங்கடேஷ்