திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
ஒன்றது பேரூர் வழியா றதற்குள
வென்றது போல விருமுச் சமையமு
நன்றிது தீதிது யென்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையொத் தாரே. 1558
விளக்கம்:
பேரூர் – சிரசு இருட்டுப் பள்ளம்
அதை அடைய ஆறு வழிகளாக சமய நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன
அது ஒருமை எனும் பெரிய குணம் கொண்டு விளங்குவதால் , அதை உணராத மக்கள் நன்று தீது என இருமையில் இருந்தபடி அதை அளப்பதால் , மலையை பார்த்து குரைக்கும் நாய் போல் இருப்பதாக சித்தர் பெருமான் நிந்திக்கிறார்
அவர் அதை உணரமாட்டார்
வெங்கடேஷ்