திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
மன்னு மொருவன் மருவு மனோமய
னென்னில் மனித ரிகழ்வரி வேழைகள்
துன்னி மனமே தொழுமின் றுணையிலி
தன்னையு மங்கே தலைப்பட லாமே. 1555
விளக்கம்:
நிலையான சுத்த சிவம் ஆனது – மனிதர் மனதுக்கேத்தவாறு ரூபம் காட்சி எடுக்கும்
இதை எடுத்துக்கூறினால் , அறிவிலா மக்கள் , சிரிப்பர் எள்ளி நகையாடுவர்
ஒருமைபட்ட மனதால் இறை தொழுதேத்தினால் , எதுவுமே தனக்கு ஈடிலா சிவம் வெளிப்பட்டு நிற்குமே
வெங்கடேஷ்