மனம் யார் பேச்சு கேட்கும் ??
சத்தியமாக நம் பேச்சு கேட்காது
36 தத்துவத்துக்குட்பட்டது யார் பேச்சும் கேட்காது
அதை தாண்டியவர் பேச்சு மட்டும் கேட்கும்
ஆன்மா பேச்சு தட்டாது
ஒரு பிரச்னைக்கு
2 மணி நேரமாக ஓயாது தொல்லை கொடுக்கும் மனம்
ஆன்மா காட்டும் 2 வினாடி காட்சியால் ( தீர்வு ) அடங்கிவிடும்
மனம் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடும்
பிரச்னை தீர்ந்துவிடும்
ஆகையால் ஆன்மா தான் குரு
மனம் ஒரு போதும் குரு ஆகா
அடங்கிய மனமும் அடங்கா மனமும் சரி
மனம் முதல் இடை கடை குரு என்பது வேடிக்கை
வெங்கடேஷ்

அன்பு
கருத்துத் தெரிவி
பகிர்