மெய்ஞ்ஞானமும் – விஞ்ஞானமும் – ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு
காரியத்தை யேகணிப்பான் கனவிஞ் ஞானி
காரணத்தி லேநிற்பான் கனிமெய்ஞ் ஞானி
சோரியத்தி லேசுகிப்பான் தொடுவிஞ்ஞானி
தூரியத்தி லேமிகுப்பான் சுடர்மெய்ஞ்ஞானி
ஆரியத்தி லாணவத்தி அடவிஞ்ஞானி
அன்பருளின் பூரணத்தில் அமரன்ஞானி 213
விளக்கம் :
உலகம் / விஞ்ஞானம் : காரியத்தில் நிற்கும்
மெய்ஞ்ஞானம் : காரணத்தில் கண்ணாக நிற்கும்
உலகம் / விஞ்ஞானம் : காரியத்தின் விளைவில் நிற்கும்
மெய்ஞ்ஞானம் : தவத்தில் துரியத்தில் மேல் உள்ள சுடரில் கண் வைத்திருப்பான்
உலகம் / விஞ்ஞானம் : பெருமை – மேல் நிலை எனும் ஆணவத்தில் நிற்பது
மெய்ஞ்ஞானம் :
ஆன்மாவின் அருளில் , முழுமையில் விளங்குவான் அமர்ந்திருப்பவன்
இம்மாதிரி இருவர்க்கும் உள்ள வானளாவிய வித்தியாசம் உரைத்தவாறு
வெங்கடேஷ்