திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
இத்தவ மத்தவ மென்றிரு பேரிடும்
பித்தரைக் காணில னாமெங்கள் பேர்நந்தி
யெத்தவ மாகிலெ னெங்கும் பிறக்கிலெ
னொத்துணர் வார்க்குஒல்லை யூர்புக லாமே. 1568
விளக்கம் :
இந்த தவம் சிறந்தது அந்த தவம் தாழ்ந்தது என இருமையில் நிற்போராகிய பைத்திய மனம் உடையவரை எங்கள் நந்தி கண்டுகொள்வதிலை
ஏனெனில் தெய்வம் இறை ஒருமையில் இருப்பது
எந்த சரியான தவம் ஆக இருந்தாலும் , எந்த நாட்டில் பிறந்து பயின்றாலும் , அந்த தவத்துக்கான நெறியோடு ஒத்து போனால் , பழமையான ஊரான சிவம் விளங்கும் உச்சி சேரலாகுமே
உலகில் ஆர் ஒத்துக்கொள்வார் ??
வெங்கடேஷ்