பட்டினத்தார் அருட்புலம்பல்
1 ஏட்டுக்கு அடங்காண்டி! எழுத்தில் பிறவாண்டி!
நாட்டில் நரிகளெல்லாம் நல்புரவி செய்தாண்டி!
விளக்கம் :
இறை நூல் கல்வியாலும் எழுத்தாலும் அறியொண்ணாதவனாக விளங்குகின்றான்
அவன் நம் உடலில் இருக்கும் அபானன் யாவையும் வாசியாக மாற்றி அருள் செய்தான்
நரி – அபானன்
பரி – வாசி
2 பேசாப் பிரமமடி! பேச்சிறந்த பேரொளிகாண்!
ஆசா பாசங்கள் அணுகாத வேரொளிகாண்!
விளக்கம் :
ஆன்மா மௌனத்தில் இருப்பது
அந்த பேரொளியானது ஆசை பாசம் அணுகா உயரத்தில் விளங்குவது
ஆன்மா நிலை பெருமை குறித்து சித்தர் உரைத்தவாறு
வெங்கடேஷ்