கேசரி முத்திரை விளக்கம் – அகத்தியர் சௌமிய சாகரம் 1200
பண்ணப்பா தியானமது குருத்தியானம்
பரமகுரு சீர்பாதந் தியானம் கேளு
உண்ணப்பா கண்ணான மூலந் தன்னில்
முத்திகொண்ட அக்கினியாஞ் சுவாலை தன்னை
நண்ணப்பா வாசியினால் நன்றாய் ஊதி
நடுமனையைப் பிடித்தேறி நாட்டமாக
விண்ணப்பா கேசரியாம் புருவ மையம்
மேன்மை பெறத் தானிறுத்தி வசிவசி மென்றே. 87
விளக்கம் :
தியானம் எப்படி செய்வது என விவரிக்கின்றார் சித்தர்
பரமகுரு – அவர்/அதன் பாதம் வைத்து தவம் செய்வது எப்படி ??
“ மூலமாகிய கண்ணில்” நோக்கம் நோட்டம் வைத்து , அதன் மூலம் முத்தியாம் சோமசூரியாக்கினி கலைகளை ஒன்றாக்கி , நடு மனையாம் மத்திமத்தில் நிலைத்து , வாசி பிடித்து , சுவாசத்தால் பெருஞ்சோதியாக்கி , அகரமாகிய கேசரத்தில் நிலைத்து நிற்றல் ஆகுமே
பரமகுரு – ஆன்மா – ஆன்ம பாதம்
இதில் கேசரி முத்திரை எப்படி இருக்கும் ?? எப்படி செய்வது என விவரிக்கிறார் அகத்தியர்
அதாவது கண் மேல் நோக்கிய பார்வை தான் கேசரி
ஆனால் உலகம் : அது சாம்பவி மகா சாம்பவி என விளக்கமளிக்குது – நம்மை குழப்புது
அதனால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேணும் – இலை எனில் மோசம் போய்விடுவோம்
வெங்கடேஷ்