ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு
ஞானியர் படி நிலைகள்
1 வாசியினைப் பிறையார விட்டோன் வாழ்க்கை
வயதீரெட் டாயிரமாம் வளமை காணே
2 வாசியினை பிந்துமணி யாக்கிக் கொண்டான்
வயதறுபத் தாயிரமாய் வயங்கு மென்பார்
3 வாசியினை நாதாந்த வசமாக் கிட்டான்
வயதுகணக் கில்லையடா வாழ்வான் வாழ்வான்
4 வாசியினை யுண்மணிக்கே வார்த்தா னப்பா
வானமரன் நித்யசிரஞ் சீவி தானே 301
விளக்கம் :
வாசி வசமாக்கி பூரிக்க செய்பவன் 16000 ஆண்டுகளும் , அதன் மூலம் விந்துவை மணியாக்கி கொண்டவன் 60000 ஆண்டுகளும் , வாசியை நாதாந்த நாட்டுக்கு ஏற்றியவன் கணக்கிலை எனவும்
வாசியை உன்மணி எனும் நிலா மண்டபத்துக்கு ஏற்றியவன் சிரஞ்சீவி – அழிவிலா தலைவன் – மரணமிலாப்பெருவாழ்க்கை அடைந்தவன் ஆவான் என படி நிலை அனுபவங்கள் எடுத்துரைக்கிறார் சித்தர்
வெங்கடேஷ்

1Badhey Venkatesh