சிவவாக்கிய சித்தர்🙏🏼
பாருமெந்தை யீசன் வைத்த பண்பிலே யிருந்து நீர்
சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்
வேரை யும்முடியையும் விரைந்துதேடி மாலயன்
பாரிடந்து விண்ணிலே பறந்துகண்ட தில்லையே
விளக்கம் :
சுத்த சிவம் வகுத்த நெறியில் நின்று , நடுவாம் சிற்றம்பலவன் ஆகிய செம்பொருள் அனுபவம் பெறுவீர் அதனுடன் கலப்பு எய்துவீர்
அதன் அடி முடி தேடி காணாது மாலும் பிரமனுன் புலம்புகிறாரே
வெங்கடேஷ்