“ ஞானியர் ஒற்றுமை “
பட்டினத்தார்
என்ன தான் கற்றாலும் எப்பொருளும் கற்றாலும் என்
உனையறியார் உய்வரோ பூரணமே??
காரை சித்தர்
ஞானம் பெருமை – ஶ்ரீகாரைச்சித்தர்
1 எத்தனைதா னிருந்தாலு மென்னே யென்னே
இருக்குமிட மிருப்பிடமா யில்லை யென்றால்
2 எத்தனைதான் சிந்தித்தும் பயன்தா னென்னே
இறையளவும் மோனநிலை யில்லை யென்றால்
3 எத்தனைதான் வந்தித்தென் நிந்தித் தென்னே
ஈசனரு ளாங்கவச மில்லை யென்றால்
4 அத்தனையும் பாழாகும் கந்த னென்பாய்
அவனருளால் பாவமெலாம் விலகிப் போமோ 252
விளக்கம் :
1 உலகில் மாந்தர்க்கு சொத்து எவ்வளவு தான் இருந்தால் தான் என் பயன் ??
தான் வாழும் உலகம் இடம் வீடு தன் இருப்பிடமாக இல்லாத போது ??
ஓரு பயனுமின்று
2 மனிதர் என்ன தான் சிந்தித்து பெரிய விஞ்ஞானி ஆக ஆனால் தான் என் பயன் ??
மோன வரம்பு கூடாத போது ஒரு பயனுமிலையாம்
3 சிவனார் அருள் இலை எனில் – எத்தனை தான் போற்றினால் / தூற்றினால் தான் என் பயன் ??
4 ஆன்மா அதன் அருளால் பாவமெல்லாம் பறந்து போகுமே
ஞானியர் கருத்து ஒருமித்துளார்
வெங்கடேஷ்