திருமந்திரம் ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம்
சித்த மியாவையுஞ் சிந்தித் திருந்தாரு
மத்த னுணர்த்து வதாகு மருளாலே
சித்த மியாவையுந் திண்சிவ மாண்டக்கா
லத்தனு மவ்விடத் தேயமர்ந் தானே 1582
விளக்கம்:
ஆன்ம சாதகன் எண்ணத்தில் முழுவதும் சுத்த சிவத்தை வைத்து அவனையே சிந்தித்து இருக்கின்ற அடியவர்களுக்கு இறைவனே தந்தையாக வந்து அனைத்தையும் வழி காட்டி உணர வைப்பது அருள் ஆகும்.
அப்போது அவனின் எண்ணங்கள் முழுமையும் உறுதியாக சிவமே நிரம்பி நின்றக்கால் , அப்பொருளே அவன் சித்தத்திலேயே குருவாக வந்து கொலு வீற்றிருப்பான் என்றவாறு
வெங்கடேஷ்