“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – வாசி பெருமை “
பேசிலவ மாமறையே பேசாத மோனத்தே
வாசியதன் போக்கதனை வாசியடா வாசியடா
வாசியற மனமறவே வாசிவையும் வந்திடுவாள்
வாசிவனே யெனவுன்னை வாசியணை மேலணைவாள் 344
விளக்கம் :
வேதாந்த நிலைக்கும் மௌனமாகிய ஆன்மாவுக்கு வாசியை பூரிக்க செய்
வாசி அனுபவத்தால் மனமும் இறக்க – உமையாகிய சக்தியும் தரிசனம் கொடுப்பாள்
சிவை – சக்தி
வா வா சிவனே என ஆன்ம சாதகனை உச்சிக்கு இட்டு செல்வாள்
வெங்கடேஷ்