திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – சிவகுரு தரிசனம்
திருவாகிச் சித்தியு முத்தியுஞ் சீர்மை
யருளா தருளு மயக்கறு வாய்மை
பொருளாய வேதாந்த போதமு நாத
னுருவருளா விடிலோர வொண் ணாதே 1584
விளக்கம் :
உலக வாழ்வு/பிறவியில் இருந்து விடுதலையும் – அற்புத ஆற்றல்களும் – ஆன்ம அனுபவமும் – மாயை எனும் மல மயக்கம் நீக்கி , வேதத்தின் எல்லை ஆம் வேதாந்தம் கிட்ட செய்வதும் சிவமே குருவாக வந்து அருளாவிடில் நடக்காது
சிவமே குருவாக வரும் – எல்லாம் நடத்தும் என்றவாறு
இவர் அக குரு – புற குரு அல்லர்
ஆன்மா தான் அக குரு
மனம் அல்ல
வெங்கடேஷ்