“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – பத்தாம் வாசல் பெருமை “
எவ்விட முஞ்சென் றேயமரும்
ஈயா காமற் றேனீயாய்
செவ்விட மொன்றே சேர்ந்திட்டால்
சித்தர்கள் ஞானச் சித்தியதே 376
விளக்கம் :
வீட்டு ஈ எல்லாவிடத்தும் அமரும்
தின்பண்டத்திலும் சரி மலத்திலும் அமரும்
அது மாதிரி இராமல் – பூவில் மட்டும் அமரும் தேனீ மாதிரி – உலக வாழ்வு இல்லாமல் தவ வாழ்வு – இறை சிந்தை மட்டும் உளதான வாழ்க்கை அமைத்துக்கொண்டாலலாது – நாதம் விளங்கும் உச்சி இடம் சார முடியாது என்றவாறு
அது அடைந்துவிட்டால் ஞான சித்தி கைவசமானதே
செம்மை – நாதஸ்தானம்
வெங்கடேஷ்