அகத்தியர் -உச்சி பெருமை
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
விளக்கம் :
மேலோட்டமாக பார்த்தால் , மனதை வளப்படுத்தினால் ?? பக்குவப்படுத்தினால் போதும்
மந்திரம் /வாசி தேவையிலை போலத் தெரியும்
ஆனால் இதன் உட்பொருள் :
செம்மை = சக்தி விளங்கும் அண்ணாமலை/ பிரமரந்திரம்
அங்கு ஏறாத நிலை மேல் நம் உணர்வு ஏறிய பிறகு தான்
மந்திரம் ஜெபிக்க வேண்டாம்
வாசி உயர்த்த வேண்டாம்
அது வரை ??
இந்த அனுபவம் சித்திக்க , வாசி துணை இல்லாமல் நடக்காது
ஆகையால் நேரடியான பொருள் எடுக்கக் கூடாது
வெங்கடேஷ்