“ ஆண்டாள் விண்ணப்பம் – வாசி அனுபவம் “
16 நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
“ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய் “ .
பொருள் :
நாம் எல்லவரும் நினைத்துக்கொண்டிருப்பது ஆண்டாள் பக்தி செய்து ரங்கனை மணந்தாள் என
ஆனால் அவள் யோகத்தாலும் ஞானத்தால் தான் அது நடந்தது என்பதை நிரூபிக்கும் பாசுரம்
வாசல் – சொர்க்க வாசல் பரமபத வாசல் திறக்கவும் என காப்போனை வேண்டுகிறார்
இது சுழிமுனை வாசல்
இது திறந்தால் வாசி அனுபவம் கிட்டும்
எப்படி ஆண்டாள் யோகம் ??
வெங்கடேஷ்