திருவெம்பாவை : “ திருவடி விளக்கம் – திருவெம்பாவையும் – திருப்பாவையும்” திருவெம்பாவை : செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் “ செங்கமலப் பொற்பாதந் “ தந்தருளுஞ் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய் திருப்பாவை 17 : அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்!கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்அம்பர மூடறுத் தோங்கி உலகளந்தஉம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்! “ செம்பொற் கழலடி “ செல்வா! பலதேவா! உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்!…