திருமந்திரம் – ஆறாம் தந்திரம்

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் ஞாதுரு ஞான ஞேயம் தானென் றவனென் றிரண்டாகுந் தத்துவந்தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டுதானென் றபூவை யவனடி சாத்தினால்நானென் றவனென்கை நல்லதொன் றன்றே 1607 விளக்கம்: தான் ஆகிய  ஜீவனும் அவன் ஆகிய ஆன்மாவும் இந்த இரண்டு தத்துவத்தையும் தன் அகத்தில் தவத்தினில் கண்டு , தான் எனும் அசைவை ஒழித்து ஆன்மாவுடன் கலந்து நின்றால் ,   தானும் அவனும்  நல்லதான  ஒன்றே என உணர்வான் வெங்கடேஷ்

“ ஞானியும் சாமானியரும் “

“ ஞானியும் சாமானியரும் “ ஞானி : ஆட்டுவித்தால் ஆடுகிறேன் பாட்டுவித்தால் பாடுகிறேன் உண்பித்தால் உண்கிறேன் என் செயலாவது ஒன்றுமிலை என் தெய்வமே எல்லாம் அவன் செயல் சாமானியன் : “ சீட்டு எழுதிக்கொடுத்தால் பேசுகிறேன் “ “ ரிமோட் கையில் கொடுத்தால் விழா துவக்குகிறேன் “   “ கோப்பு நீட்டினால் கையொப்பம் இடுகிறேன் “ “ என் செயலாவது ஒன்றுமிலை என் அண்ணாவே “ எல்லாம் என் குடும்பம் செயல் வெங்கடேஷ்

“ பாசறை – சன்மார்க்க விளக்கம் “

“ பாசறை – சன்மார்க்க விளக்கம் “ பாசறை எனில் ஆயுக்கிடங்கு/பாசங்கள் இருக்கும் அறை பாசங்கள் ஆகிய மும்மலம் இருப்பிடம்  பாசறை =  பாடி மும்மலம் எங்குளதோ அங்கேயே அதை வெல்கின்ற ஆயுதமும் இருக்கு அதனால் பாசறை /பாடி ஆயர்பாடியில் கண்ணன் துயில் இருக்கிறான் மும்மலம் வெல்லும் ஆன்மா ஆகிய கண்ணன் இருப்பது ஆயர்பாடி ஆகிய பாசறை எனும் பாடி வெங்கடேஷ்