“ ஞானியும் சாமானியரும் “
ஞானி :
ஆட்டுவித்தால் ஆடுகிறேன்
பாட்டுவித்தால் பாடுகிறேன்
உண்பித்தால் உண்கிறேன்
என் செயலாவது ஒன்றுமிலை என் தெய்வமே
எல்லாம் அவன் செயல்
சாமானியன் :
“ சீட்டு எழுதிக்கொடுத்தால் பேசுகிறேன் “
“ ரிமோட் கையில் கொடுத்தால் விழா துவக்குகிறேன் “
“ கோப்பு நீட்டினால் கையொப்பம் இடுகிறேன் “
“ என் செயலாவது ஒன்றுமிலை என் அண்ணாவே “
எல்லாம் என் குடும்பம் செயல்
வெங்கடேஷ்