“ திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – துறவு பெருமை “
அறவன் பிறப்பிலி யாரு மில்லாதா
னுறைவது காட்டக முண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே. 1616
விளக்கம்:
சுத்த சிவம் குணம் உரைத்தல்
1 தர்ம வழி நிற்பவன்
2 பிறப்பில்லாத பெருங்குணம் உடையவன்
அவன் இருப்பிடம் காடு ஆகிய துவாத சாந்த பெருவெளி எனும் தில்லை வனம் – கடம்ப வனம்
அது மும்மலக் காடு
3 அவன் உணவு பிச்சை எனில் ??
பிச்சைக்காரர் மாதிரி அரிசி கோதுமை அல்ல
விந்து தான் அவன் நம்மிடம் பிச்சை கேட்பது
4 அவன் எதனுடனும் கலவாமலும் தனித்து நிற்கும் குணமாம் துறவு கொண்டவன்
யார் அந்த மாதிரி தனு கரண புவன போகம் துறக்கின்றாரோ, அவர்க்கு மீண்டும் பிறவா நெறியாம் மரணமிலாப்பெருவாழ்வு அளிக்கும் பித்தன்
எல்லா சித்தியும் வழங்குபவன்
வெங்கடேஷ்