திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – துறவு
திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – துறவு பிறந்து மிறந்தும் பல்பேதைமை யாலே மறந்து மலவிரு ணீங்க மறைந்து சிறந்த சிவனருள் சேர் பருவத்துத் துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே 1615 விளக்கம்: ஜீவர்களின் அறிவில் மலக்கலப்பால் தனை அறியும் அறிவில்லாமல் பல பிறவிகளில் பிறந்து இறந்து வருகின்றார் தக்க தருணத்தில் , தவம் செய்த பயனால் சத்தினிபாதம் வாய்க்கும் காலத்தில் , சிவத்தின் அருள் வெளிப்பட்டு , எல்லா உலகப் பற்றுக்களையும் – தனு கரண…