திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – துறவு
பிறந்து மிறந்தும் பல்பேதைமை யாலே
மறந்து மலவிரு ணீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர் பருவத்துத்
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே 1615
விளக்கம்:
ஜீவர்களின் அறிவில் மலக்கலப்பால் தனை அறியும் அறிவில்லாமல் பல பிறவிகளில் பிறந்து இறந்து வருகின்றார்
தக்க தருணத்தில் , தவம் செய்த பயனால் சத்தினிபாதம் வாய்க்கும் காலத்தில் , சிவத்தின் அருள் வெளிப்பட்டு , எல்லா உலகப் பற்றுக்களையும் – தனு கரண புவன போகத்தையும் உண்மையாக துறக்கும் காலத்தில் , மெய்ப்பொருள் காட்சி அளிக்கும்
மெய்ப்பொருள் – ஆன்ம ஒளி
வெங்கடேஷ்