“ தெய்வமும் ஆயுதமும் “
உண்மை சம்பவம் Jan 2023
சென்ற மாதம் நான் சென்னை வந்திருந்த போது ஒரு அன்பருடன் நடந்த உரையாடல்
அவரிடம் நான் திருவாசகம் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை பெருமை பேசிக்கொண்டிருந்தேன்
அதில் இல்லா வித்தை / விளக்கமே இலை எனவும் கூறினேன்
எனக்கு வரும் விஷனுக்கும் விளக்கம் அதில் இருந்து தான் எடுப்பேன் என்றேன்
ஒரு சமயம் – கண்ணனின் அண்ணன் பலராமர் என் விஷனில் கலப்பையுடன் வந்தார்
எனக்கு புரியவிலை
நான் திருவாசகம் உரை பார்த்தேன்
அதில் கலப்பை கொண்டு சுழிமுனை வாசல் திறக்கவேணும் என்றிருந்ததைப் படித்து அதிர்ந்து விட்டேன்
அவரும் : ஆமாம் – உண்மை தான்
வாராகி அம்மன் கையிலும் கலப்பை ஆயுதம் இருக்கு
இதை தான் சமயபுரம் கோவில் கோபுரத்தில் கண்டதாக கூறினார்
ஏன் ?? இவ்வாறு அமைத்துள்ளனர்
கலப்பை பூமி உழும் எந்திரம்
வாராகி – பன்றி முகம்
பன்றி நிலத்தை பிளந்து செல்லும் விலங்கு
ஆக ரெண்டும் ஒன்றாய்ப்போனது
ஆகையால் , யோகத்துக்கு வேண்டிய அனுபவத்துக்கு வர கலப்பை அவசியம்
நிலம் ஆகிய மூலத்தை பிளக்க ஆழ்ந்து செல்ல , ஒரு பயிற்சி இருக்கு
நிலம் எனும் மூலத்தில் இருந்து தான் வாசி உருவாகுது
அதை உருவகப்படுத்த தெய்வமாக – வாராகி அம்மனும் ,
ஆயுதமாக கலப்பையும் உண்டாக்கி , அதை அம்மன் கையில் ஏற்றிவிட்டனர் நம் முன்னோர்
வாசி உருவாக்க விரும்புவோர் / பயிற்சி செய்வோர் வணங்க வேண்டிய தெய்வம் வாராகி அம்மன் என இதன் மூலம் தெளிவாகுது
இனி என்னிடம் பயிற்சி கற்போரிடம் வாராகி அம்மனை வணங்கவும் என ஆலோசனை வழங்குவேன்
வெங்கடேஷ்