திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – ஞாதுரு ஞான ஞேயம்
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின்பால்
வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி
யுய்த்த தவத்தாந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே 1612
விளக்கம்:
மூன்று நாடிகளில் இரு முனை சுவாசம் தவிர்த்து சுழிமுனை இயக்கம் நடைபெறச்செய்து , அதை சந்திரனின் 16 கலை ஆக மாற்றி மனோன்மணி நிலை அடைந்தவர் உலகத்திலும் மீண்டும் பிறந்து இறந்து வரமாட்டார்
அவர் மும்மலம் ஆகிய முத்திரை கிழித்திருப்பர்
குரு பாதம் – திருவடி விளங்கும் சிற்றம்பலம்
சிற்றம்பலம் சேர்ந்தோர் பிறப்பிறப்பில் வாரார் என்றபடி
வெங்கடேஷ்