ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு
1 வரநெறி யறியா வானரங்கள்
வாகடம் தேடி யலைவதுமேன்?
விளக்கம் :
உயிர் வரு வகை அறியாமல் இருக்கும் குரங்கு போல் இருக்கும் மனிதர்கள் – மருத்துவ நூல்களை தேடி முப்பு – ரசவாதம் என அலைவது ஏன் ??
2 புலநெறி யறியாப் புவிமாந்தர்
போக்கிடம் தேடிப் புலம்புவதேன்?
விளக்கம் :
ஐம்புலன் பணி – அடக்கும் விதம் முறை அறியாமல் இருக்கும் மக்கள் – மோட்சம் முத்தி என தேடி கிட்டாமல் அரற்றுவது ஏன் ??
3 உளநெறி யடக்கி யாண்டல்லோ
உயர்வன வாசத் துறவதெலாம்?
விளக்கம் :
மனதை அடக்கி தன் வசப்படுத்தினால் தானே ?? மேலான பர வாழ்வு சுகம் – பரத்துடன் தொடர்பு எல்லாம்
4 வெறுநெறி விட்டால் வேதையெலாம்
வித்துக் குள்ளே விளையாடும் 27
விளக்கம் :
வீணான உலக வாழ்வு விட்டுவிட்டு , தவம் ஞானம் என வாழ்ந்தால் தான் எல்லா வித்தையும்அறிவும் விளங்கி அதன் சித்துகள் எல்லாம் கைவசம்
வெங்கடேஷ்