திருமந்திரம் : ஆறாம் தந்திரம் – தவம்
இருந்து வருந்தி யெழிற்றவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
யிருந்திந் திரனே யெவரே வரினுந்
திருந்துந் தன்சிந்தை சிவனவன் பாலே 1627
விளக்கம் :
தன் உடல் வருத்த தவம் இயற்றும் பெருமை உடைய தவசிகளின் தவத்தை கெடுக்க – சீர் குலைக்க இந்திரனே வந்தாலும் , இன்ன பிறர் வந்தாலும் – இந்திர லோக சுந்தரிகளே ஆனாலும் சரி – தவசிகள் சிந்தை எல்லாம் அந்த சுத்த சிவத்தின் மேல் தான்
வெங்கடேஷ்