திருமந்திரம் ஆறாம் தந்திரம் – தவம்
“ பார்வை – அசைவொழித்தல் பெருமை “
சாத்திர மோதுஞ் சதிர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோ
லார்த்த பிறவி அகலவிட் டோடுமே 1631
விளக்கம் :
சாத்திரம் ஓதுபவர்களை – அதன் பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு , தவம் செய்து பார்வை உள் செலுத்தி நோக்குங்கள்
அவ்வாறு நோக்குவதால் , அது அசைவற நிற்கும் போது , அதன் பயனால் அனுபவங்களால் , பலப்பல அனுபவம் கிட்டி , பிறவித்துயர் கெடும் என்றவாறு
பார்வை மற்றும் அசைவொழித்தல் பெருமை பாடுவது இந்த மந்திரம்
வெங்கடேஷ்