திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – தவம்
அமைச்சரு மானைக் குழாமு மரசும்
பகைத்தெழு பூசலுட் பட்டன் னடுவே
யமைத்ததோர் ஞானமு மாக்கமு நோக்கி
யிமைத்தழி யாதிருப் பாரவர் தாமே.
விளக்கம் :
நல்ல கூர் அறிவு கொண்ட அமைச்சர் , தேர்ந்த யானைப்படை உடைய நல்ல திறமையான அரசு ராஜ்ஜியம் , பகையால் நாசமாவது போல் ,
எந்த ஆன்ம சாதகர் இமைப்பொழுதும் சிவத்தை மறப்பிலராய் இருக்காரோ , அவர்க்கு உண்மை அறிவும் அதன் வளர்ச்சி ஆகிய எல்லா பேறும் கிட்டும் என்றவாறு
அவர் அழியாமல் என்றென்றும் வாழ்வாங்கு வாழ்வர் பாரே
வெங்கடேஷ்