திருமந்திரம் ஆறாம் தந்திரம் – தவ தூடணம்
ஓதலும் வேண்டா முயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டா மெய்காய மிடங்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே 1633
விளக்கம் :
ஆன்ம சாதகன் தன் உயிருக்குள் உயிராக சுத்த சிவம் உறைவது என்ற அனுபவம் சித்தியானால் மந்திரங்கள் ஓத வேண்டியது இல்லை.
ஆன்ம அனுபவம் சித்தி ஆக வேணும்
சுத்த சிவம் தங்களின் உடலையே கோயிலாக இடமாக கொண்டு வீற்றிருக்க வைத்தால் எந்த விதமான தேவைகளும் இல்லை.
ஆதி ஆகிய ஆன்மாவுடன் சமம் எனும் சமாதி அனுபவம் கைவரப் பெற்று விட்டால் உடலுக்கு அழிவு என்பதே இருக்காது.
ஐந்து புலன்களும் காட்டுகின்ற வழிகளில் போகாமல் அவற்றை தன் இஷ்டத்திற்கு மாற்றி இருப்பவர்களுக்கு இறைவனை தேடி எங்கும் போக வேண்டியது இல்லை.
வெங்கடேஷ்