திருமந்திரம் – ஆறாம் தந்திரம் அருளினால் ஞானம் அடைதல்
காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்
நேயத்தே ரேறி நிமலனருள் பெற்றா
லாயத்தே ரேறி யவனிவ னாமே.1651
விளக்கம்:
உயிர்கள் தற்போது இந்த உடல் எனும் தேரேறி , ஐம்புலங்களும் மனதின் வசம் இருப்பதால் மாயை வசப்பட்டுள்ளன
மலரகித ஜீவனாக இருக்கின்றான்
தவத்தால் , மனதை இறக்கி அறிவு அன்பு எனும் தேரேறி , அதன் பயனால் சுத்த சிவத்தின் அருள் பெற்றக்கால் – பொன் ஒளி தேர் ஏறி , சிவமயமாகலாம்
இறைவனாகவே ஆகலாம்
வெங்கடேஷ்